வாடகை தொகையை செலுத்தாத கடைகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள காந்தி மார்க்கெட் பகுதியில் 51 கடைகளும், பேருந்து நிலையத்தில் 50 கடைகளும் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இந்த கடைகளுக்குரிய வாடகை பாக்கியை உரிமையாளர்கள் செலுத்தாமல் இருந்துள்ளனர். இந்நிலையில் நகராட்சி வருவாய்துறையினர் கடை உரிமையாளர்களிடம் நேரில் சென்று வாடகை பாக்கியை கேட்டுள்ளனர். மேலும் தபால் மூலம் நினைவூட்டல் கடிதம் அனுப்பியுள்ளனர். இதனையடுத்து பகுதியளவு தொகையை செலுத்திவிட்டு சில நாட்களில் முழு தொகையும் செலுத்துவதாக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். […]
