தேனி மாவட்டத்தில் பூட்டியிருந்த வீட்டில் இருந்து 45 பவுன் தங்க நகைகளை திருடிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். தேனி மாவட்டம் போடியில் அன்னகாமு(49) என்பவர் வசித்து வந்துள்ளார். அவரது கணவர் இளங்கோ கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் அன்னகாமு தனியாக வசித்து வந்துள்ளார். இதனையடுத்து இவர்களின் மகள் கார்த்திகை பிரியாவுக்கும், மகன் கௌதம் பிரபுவுக்கும் திருமணம் முடிந்துள்ள நிலையில், பிரியா தேவதானப்பட்டியிலும், கௌதம் மதுரையிலும் வசித்து வருகின்றனர். […]
