ஊரடங்கு காலத்தில் பூசணிக்காய் வாங்க வியாபாரிகள் முன்வராத காரணத்தினால் விவசாயிகள் நஷ்டத்தில் தவிக்கின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வடவாளம் கிராமத்தில் ஏராளமான விவசாயிகள் தங்களது நிலங்களில் பூசணிக்காயை சாகுபடி செய்துள்ளனர். மேலும் அதே பகுதியில் வசிக்கும் கலியன் என்ற விவசாயி தனது நிலத்தில் 1 ஏக்கர் பரப்பளவில் பூசணிக்காய் சாகுபடி செய்துள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் சாகுபடி செய்யப்பட்ட பூசணிக் காய்களை அதிக விலைக்கு விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது சமையலுக்காகவும், திருஷ்டிக்காகவும் அனைவரும் […]
