நவராத்திரி விழாவை முன்னிட்டு பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்து காணப்பட்டது. நவராத்திரி விழாவை முன்னிட்டு கடந்த ஒரு வாரமாக பக்தர்கள் விரதமிருந்து பூஜை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நவராத்திரியின் சிகர நிகழ்ச்சியான ஆயுத பூஜை என்றும் சரஸ்வதி பூஜை இன்று கொண்டாடப்படுகிறது. இதனால் பூஜை பொருட்கள் வாங்குவதற்கு கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனையடுத்து தச்சநல்லூர், பாளையங்கோட்டை, நெல்லை டவுன் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைவீதியில் பொதுமக்கள் பூஜைப் பொருட்களான அவல், பொரிகடலை, சந்தனம், […]
