புழல் அருகே வாடகை வீட்டை காலி செய்ய மறுத்த விவகாரத்தில் போலீசார் தாக்கியதாக புகார்கள் கூறியுள்ள நபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சிசிடிவி வீடியோ வெளியாகியுள்ளது. சென்னை புழல் அடுத்த விநாயகபுரத்தில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் ஓட்டேரியைச் சேர்ந்த பெயிண்டர் சீனிவாசன் என்பவர் வாடகைக்கு குடியிருந்து வந்தார். பல மாதங்களாக வாடகை தராமலும் தொடர்ந்து குடித்து விட்டு தகராறு செய்து வந்தாலும் வீட்டை காலி செய்யுமாறு ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். ஆனால் வீட்டை காலி செய்ய […]
