நேபாளத்தில் பயணிகள் விமானம் ஒன்று புறப்படும் போது ஒடுதளத்தில் இருந்து விலகி புல்தரையில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. நேபாள நாட்டின் தலைநகரான காத்மண்டு விமான நிலையத்தில் பரபரப்பான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இன்று காலை ஸ்ரீஏர்லைன்ஸ் என்ற பயணிகள் விமானம் காத்மண்டில் இருந்து நேபாள் நாட்டில் உள்ள கஞ்ச் நகருக்கு புறப்படுவதாக இருந்தது. இந்த நிலையில் பயணிகளை ஏற்றிக்கொண்டு விமானம் புறப்படுவதற்கான ஓடுதளத்திற்கு வந்துள்ளது. அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக விமானம் ஓடுதளத்தில் இருந்து விலகி சென்றுள்ளது. […]
