இலங்கை அகதிகள் 38 பேரை சட்ட விரோதமாக மங்களூருக்கு அனுப்பி வைத்த 3 பேர் வீட்டில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் உள்ள மரைக்காயர் பட்டினம் கடற்கரைக்கு கடந்த ஜூன் மாதம் 11ஆம் தேதி இலங்கையில் இருந்து 38 அகதிகள் பிளாஸ்டிக் படகில் வந்து இறங்கியுள்ளனர். இந்நிலையில் அவர்கள் ராமநாதபுரத்தில் இருந்து மங்களூருக்கு காரில் தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த மங்களூரு காவல்துறையினர் விசாரணை நடத்தி ஹோட்டலில் தங்கியிருந்த 38 […]
