நாகையில் அணில், புறாக்களை வேட்டையாடிய 2 பேருக்கு வனத்துறையினர் தலா 4,000 ரூபாய் அபராதம் விதித்தனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தம்பிதுரை பூங்கா அருகே இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் அங்கிருந்த புறாக்களை வேட்டையாடி உள்ளனர். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் பேரில் அங்கு வந்த வனத்துறை அலுவலர்கள் புறாவை வேட்டையாடிய இரண்டு பேரிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் காரைக்கால் அருகே கோவில்பத்து பகுதியை சேர்ந்த சிவா(20) மற்றும் […]
