மாலி நாட்டில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதால் அதிபர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் அதிபர் இப்ராஹிம் பவுபக்கர் பயங்கரவாதத்தை ஒழிக்க தவறியதாகவும், தேர்தலில் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாகவும் கூறி கடந்த 2 மாதங்களாக அந்நாட்டு மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலி இராணுவத்தினரின் ஒரு பிரிவினர் திடீரென கிளர்ச்சியாளர்களாக உருமாறி புரட்சியில் ஈடுபட்டுள்ளனர். தலைநகர் பமாகோவை ஆக்கிரமித்த கிளர்ச்சி ராணுவ வீரர்கள் தெருக்களில் துப்பாக்கியால் […]
