புத்தாண்டை முன்னிட்டு அக்னி தீர்த்த கடலில் புனித நீராட தடை விதிக்கப்பட்ட நிலையில் பக்தர்கள் தடையை மீறி புனித நீராடியுள்ளனர். புத்தாண்டை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் நேற்று அதிகாலையில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அலைமோதியுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடுவதற்கு தடை விதித்துள்ளனர். இருப்பினும் பக்தர்கள் தடையை மீறி அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி […]
