கிராமசபை கூட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள புத்திரகவுண்டம்பாளையம் கிராம ஊராட்சி பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கிராமசபை கூட்டம் தொடங்கியவுடன் பொதுமக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக ஊராட்சி நிர்வாகத்தினர் பொதுமக்களிடம் கேட்டபோது “ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் முறையாக சம்பளம் மற்றும் பணி வழங்காததால் அதற்கான கூட்டம் நடத்துவதற்கு எதிர்ப்பு […]
