ஒன்று முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களின் புத்தகப்பை சுமையை அதிரடியாக குறைக்கும் வகையில் மத்திய கல்வி அமைச்சகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ஆனால் கடந்த திங்கட்கிழமை முதல் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகள் திறப்பு பற்றி அரசு எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. அதனால் பள்ளி மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் மூலமாகவே பாடங்கள் கற்பித்து வருகின்றனர். […]
