காதல் திருமணம் செய்த புதுப்பெண்ணை காரில் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள தெச விளக்கு பகுதியில் ஜெகநாதன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு மெக்கானிக்கான ராஜேஷ் கண்ணன் என்ற மகன் இருக்கின்றார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜேஷ் கண்ணனுக்கும் அதே பகுதியில் வசிக்கும் வெள்ளகுட்டி என்பவரின் மகளான புவனேஸ்வரிக்கும் இடையே காதல் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதனையடுத்து கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய […]
