புதுவை கவர்னர் கிரன்பேடி மருத்துவர்கள் பாதுகாப்பாக இருக்க நான் விரும்புகிறேன் என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். உயர் அதிகாரிகளைக் கொண்ட பல்வேறு வாட்ஸ்அப் குழுக்களை புதுவை கவர்னர் கிரண்பேடி வைத்துள்ளார். அதன் மூலம் அதிகாரிகளுக்கு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். சமீபத்தில் சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் முகாமிற்கு சென்று கிரண்பேடி மருத்துவ அதிகாரிகளை திட்டியதாக கூறப்படுகிறது. சமூகவலைத்தளங்களில் இதுதொடர்பான வீடியோக்கள் பரவியது. கவர்னரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து டாக்டர்கள் பலர் கவர்னரின் வாட்ஸ்அப் குழுவில் இருந்து […]
