குடும்பத் தகராறில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாடு பகுதியில் பிச்சைக்கண்ணு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பார்த்திபன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இவருக்கும் மன்னார்குடி பகுதியில் வசிக்கும் செந்தமிழ்செல்வனின் மகளான இலக்கியா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் இரு குடும்பத்தினரும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தையில் இலக்கியாவை அவர்களது உறவினர் வடுவூரில் […]
