புதுமண தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள தட்டான்பட்டி பகுதியில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மரிய மிக்கேல்(29) என்ற மகனும் இருந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மிக்கேலுக்கு சிங்கம்பாறை பகுதியைச் சேர்ந்த பேபி ஜான்சிராணி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. நேற்று முன்தினம் கிறிஸ்தவ ஆலய விழாவில் மிக்கேல் மது அருந்தி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். […]
