வட்டி கொடுமையால் 3 குழந்தைகளுடன் தம்பதி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த தம்பதியினர் மோகன்- விமலாஸ்ரீ. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மோகன் தச்சுத் தொழில் செய்து வந்தார். கொரோனா காலகட்டத்தில் ஏற்பட்ட ஊரடங்கின் காரணமாக தச்சு தொழில் மந்தம் அடைந்துள்ளது. இதனால் வீட்டின் பத்திரத்தை அடமானம் வைத்து ரூபாய் 40 லட்சம் வரை கடன் பெற்றுள்ளார். […]
