புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தல் நடத்த மேலும் 4 மாத அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் புதிய மனு அளித்துள்ளது. புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் கடந்த மாதம் 22ஆம் தேதி அட்டவணை வெளியிட்டது. இதையடுத்து பழங்குடியினர் மற்றும் பட்டியலினத்தவருக்கு இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் தற்போது உள்ளாட்சி தேர்தலை நடத்த போவதில்லை என்று புதுச்சேரி அரசாங்கம் […]
