புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற தீண்டாமை சம்பவத்திற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் கிராமத்தில் உள்ள வேங்கை வயலில் வசித்து வரும் ஆதிதிராவிடர் மக்கள் தீண்டாமை வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். பொதுமக்கள் குடிக்கும் கழிவு நீர் தொட்டியில் மலம் கலந்தததை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இந்த தண்ணீரை குடித்ததால் பல குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதன்பிறகு இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை […]
