குடோனில் பற்றி எரிந்த தீயை 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வடக்கு 4- ஆம் வீதியில் பழைய பிளாஸ்டிக் பாட்டில் பழைய இரும்பு பொருட்கள் குடோன் அமைந்துள்ளது. நேற்று இரவு குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியதை பார்த்த சிலர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி […]
