முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் உத்தரவின்படி சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் புதிய கட்டண அறிக்கையை வெளியிட்டது. கொரோன பரவலின் காரணமாக ரயில் சேவை கடந்த மார்ச் மாதம் கடைசி வாரத்திலிருந்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து நோய் பரவல் சிறிது கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர் அதில் சில தளர்வுகளை ஏற்படுத்தி ரயில் சேவை மீண்டும் கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. தற்போது சுமார் ஒரு நாளைக்கு 80 ஆயிரம் வரையிலான பயணிகள் பயணித்து வந்துகொண்டிருக்கின்றனர். […]
