தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் கந்துவட்டி கொடுமையால் 8 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இதனால் டிஜிபி சைலேந்திரபாபு கந்து வட்டி தொடர்பான அனைத்து வழக்குகளையும் உடனடியாக விசாரணை செய்ய வேண்டும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தார். இதுகுறித்து மாநகர காவல் ஆணையர் மற்றும் காவல் கண்காணிப்பாளருக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “கந்து வட்டி தொடர்பான வழக்குகளை கையாள ‘ஆப்ரேஷன் கந்து வட்டி’ என்ற சிறப்பு ஆய்வு தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி கந்து வட்டி தொடர்பான அனைத்து […]
