புதிதாக பயணிகள் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளதால் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர். தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக பல்வேறு ரயில் சேவைகள் முடக்கப்பட்டது. ஆனால் தொற்று தற்போது குறைந்ததால் படிப்படியாக ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் நெல்லையிலிருந்து ஈரோடு செல்லும் பயணிகள் ரயில் சேவையும் ஒன்றாகும். இந்த ரயில் திருநெல்வேலி, ஈரோடு மற்றும் மயிலாடுதுறை இணைப்பு பயணிகள் ரயிலாக இருந்தது. இந்த ரயில் திண்டுக்கல்லுக்கு வந்ததும் ஈரோடு மற்றும் மயிலாப்பூருக்கு தனித்தனியாக பெட்டிகள் […]
