புதிய தமிழகம் கட்சி சார்பாக நடைபெறும் தியாகி இம்மானுவேல் சேகரனார் நினைவு தினம், தாமிரபரணி நினைவு உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு காவல்துறை முறையாக எங்களுக்கு அனுமதி தர மறுக்கிறது. அரசியல் சார்ந்த நிகழ்வுகளையும் நாங்கள் நடத்த இருந்தால் எங்களை ஒடுக்குகிறது. இதனை தடுக்க வேண்டும் என டிஜிபியை நேரில் சந்தித்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கோரிக்கை மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இனிமேலாவது வரக்கூடிய காலகட்டங்களில் எங்களுடைய எந்த விதமான நிகழ்ச்சிகளுக்கும், தடைகளை […]
