தடையை மீறி புகையிலை பொருட்களை விற்ற கடைக்காரரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆத்தூர் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்கிறார்கள் என்று காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காவல்துறையினர் அப்பகுதியில் இருந்த கடையை சோதனை செய்துள்ளனர். அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் சிராஜூதீன் […]
