அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த கடைக்காரரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சூசை நகர் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியில் நின்றிருந்த ஒருவர் கையில் குட்கா பாக்கெட்டை வைத்திருப்பதை பார்த்த காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் அங்குள்ள பலசரக்கு கடையில் புகையிலை வாங்கி சென்றது […]
