புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிபாளையம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக அவினாசிபாளையம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு மூட்டைகளில் 700 கிலோ புகையிலை பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் புகையிலைப் பொருட்களை […]
