தடை செய்யப்பட்ட புகையிலை தயாரித்த குடோனுக்கு அதிகாரிகள் சீல் வைத்ததோடு உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள சண்முக நகர் பகுதியில் பால கார்த்திகேயன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். கடந்த சில ஆண்டுகளாகவே பால கார்த்திகேயன் தனது குடோனில் வாசனையுடைய புகையிலை பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றார். இந்நிலையில் பால கார்த்திகேயன் குடோனில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் […]
