1 ½ லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வீடுகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் உள்ள முத்துராஜ் என்பவரின் வீட்டில் 1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனை அடுத்து காவல்துறையினர் […]
