காரில் 2 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்களை கடத்தி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருக்கோவிலூர் அருகில் கண்டாச்சிபுரம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்து பார்த்தனர். அப்போது அந்த காரில் தடை செய்யப்பட்ட போதை புகையிலை, 18 சாக்கு மூட்டைகளில் பாக்குகள் இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து காவல்துறையினர் கார், புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து காரை […]
