தாலிபான்கள் வன்முறை தாக்குதல் நடத்தியதில் புகைப்பட செய்தியாளர் உயிரிழந்த சம்பவத்திற்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் அவர்களின் கைவசம் கொண்டு வந்துள்ளதை அடுத்து அங்கு அரசு படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே மோதல் வலுப்பெற்றது. அதில் கந்தகார் பகுதியில் ஸ்பின் போல்டக் இடத்தில் தலிபான்களுக்கும் ராணுவத்திற்கும் இடையே ஏற்பட்ட தாக்குதலில் இந்திய புகைப்பட செய்தியாளர் டேனிஸ் சித்திக் கொல்லப்பட்டார். மேலும் இவர் கொரோனா காலகட்டங்களில் கங்கை நதிக்கரையில் பிணங்கள் எரிக்கப்படுவதை தனது புகைப்படத்தின் வாயிலாக […]
