கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு ஊராட்சிஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் பற்றி பொதுமக்கள் அறிந்துகொள்ளும் விதமாக புகைப்பட கண்காட்சியானது நடைபெற்றது. இதனை பொதுமக்கள் பலர் பார்வையிட்டனர். இது தொடர்பாக கலெக்டர் அரவிந்த் கூறியிருப்பதாவது “தமிழக அரசு ஏழை, எளிய கிராமப்புற மக்களுக்காக பல நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதாவது மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த புகைப்பட கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிட்டு அரசின் திட்டங்களை தெரிந்துகொண்டு, நலத்திட்ட உதவிகளை பெற்று […]
