பீகாரில் பாஜகவுடனான கூட்டணியை ஐக்கிய ஜனதா தளம் கட்சி முறித்துக்கொண்ட நிலையில், அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் ஆளுநர் பகு சௌஹானை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அவருடன் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவும் உடன் இருந்தார். ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்ட ஆளுநர், புதிய அரசு பதவியேற்கும்வரை காபந்து முதலமைச்சராக நீடிக்கும்படிக் கேட்டுக்கொண்டார்.
