பீகார் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்றால் மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்ற பாஜகவின் தேர்தல் வாக்குறுதியில் தவறில்லை என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. 243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டசபைக்கு வரும் 28 அடுத்த மாதம் 3, 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதலமைச்சர் திரு. நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்துடன் பாஜகவும் திரு லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் காங்கிரசும் கூட்டணி […]
