கர்நாடகாவில் பி.யூ.சி. 2 ம் ஆண்டிற்கான பொது தேர்வு நாளை முதல் தொடங்கி நடைபெறுகிறது. கர்நாடகாவில் உள்ள பி.யூ.கல்லூரி 2-ம் ஆண்டு பொதுத்தேர்வு திட்டமிட்டப்படி நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகின்றது. மாணவர்கள் தேர்வு எழுத வசதியாக மாநிலம் முழுவதும் 1,076 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதில் 6 லட்சத்து 84 ஆயிரத்து 255 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகின்றார்கள். தேர்வு நடைபெறும் நாட்களில் மாணவர்கள் தங்களின் நுழைவு சீட்டை(ஹால் டிக்கெட்) காண்பித்து அரசு பஸ்களில் இலவசமாக பயணிம் செய்யலாம் என்று […]
