பொள்ளாச்சியில் பி.ஏ.பி பிரதான கால்வாயில் தண்ணீரை திருடி விற்றதால் 4 பம்புசெட்டுகளில் மின் இணைப்பை அதிகாரிகள் துண்டித்தனர். கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் பி.ஏ.பி பாசனத் திட்டம் அமைந்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றது. தற்போது பாசனம் செய்யவதற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் பிரதான வாய்க்காலில் செல்கின்ற தண்ணீரை சிலர் இரவு நேரத்தில் திருடுகின்றனர். இதனால் கடைமடை பகுதிக்கு தண்ணீர் வருவதில்லை […]
