பி.எஃப் தொகை முறையாக பணியாளர் கணக்கில் சேர்க்கப்படாததால் தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சியில் ஒப்பந்ததாரர்கள் மூலம் ஏராளமான தினக்கூலி தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இவர்களின் சம்பளத்திலிருந்து பிடிக்கப்படும் பி.எஃப் தொகை முறையாக பி.எஃப் அலுவலகத்தில் செலுத்தப்படவில்லை. இதுகுறித்து தூய்மைப் பணியாளர்கள் நகராட்சி ஆணையாளர் சேகருடன் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் பி.எஃப் தொகை கணக்கில் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த தினக்கூலி பணியாளர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு […]
