தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை விறுவிறுப்பாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் காட்சிகளில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேமுதிக கட்சி அதிமுகவுடன் கூட்டணியை ஏற்படுத்த இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அதிமுக தங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பதால் அதிருப்தி அடைந்த தேமுதிகவினர் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி வைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. […]
