பழுதடைந்த பேருந்தை ஓட்டுவதற்கு வற்புறுத்துவதாக நடத்துனர் ஒருவர் கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் உள்ள ராணித் தோட்டம் பகுதியில் அரசு போக்குவரத்து பணிமனை கழகம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு சிபு என்பவர் நடத்துனராக பணியாற்றி வருகிறார். இவர் தனக்கு ஏற்பட்டுள்ள மன உளைச்சல் தொடர்பாக ஒரு வீடியோவினை வெளியிட்டுள்ளார். அதில் நாகர்கோவிலில் இருந்து அருமனை பகுதிக்கு பணிமனை எண் 318 கொண்ட பேருந்து இயங்கி வருகிறது. இந்தப் பேருந்தில் நான் நடத்துனராக பணியாற்றி […]
