உத்தரகாண் மாநிலம் சாமூலி மாவட்டம் மலைப்பகுதியில் பிரம்ம கமலம் எனும் அரிய வகை பூக்கள் பூக்கத் தொடங்கியுள்ளன. பிரம்ம கமலம் அல்லது நீச காந்தி என்பது வருடத்திற்கு ஒருமுறை இரவில் மட்டுமே மலரக் கூடிய அபூர்வ வகை மலர். கல்லி இனத்தைச் சேர்ந்த இந்தச் செடியில் வெண்ணிறம் கொண்ட மலரானது மூன்று விதமான இதழ்களை கொண்டுள்ளது. இந்த செடிகள் மலைப்பாங்கான இடங்களில் பாறைகளுக்கு இடையே வளரும் தன்மை பெற்றது. இமயமலையின் உயரம் குறைந்த பகுதிகளில் பிரம்ம கமலச்செடிகள் […]
