பிரபல தொழிலதிபரை காரில் கடத்தி வந்த மர்ம நபர்களை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆந்திர மாநிலத்தில் உள்ள நெல்லூர் மாவட்டத்தில் வெங்கடேஸ்வரலு என்பவர் வசித்து வருகின்றார். மேலும் தொழிலதிபரான இவர் செல்போன் டவர் அமைக்கும் ஒப்பந்த தொழிலாளராக வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் வெங்கடேஸ்வரலுவை மர்ம நபர்கள் ராணிப்பேட்டை பகுதிக்கு கடத்தி வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி வெங்கடேஸ்வரலுவின் செல்போன் சிக்னலை வைத்து மேல்விசாரம் பகுதியில் […]
