மலேசியா சென்ற போது ஓட்டலில் இரவு விருந்துக்கு அழைத்ததாக பிரபல தொழில் அதிபர் இப்ராகிம், பாஸ்கரன் மற்றும் ஸ்ரீதரன் மீது பிரபல நடிகை அமலாபால் வழக்கு தொடுத்துள்ளார். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டுள்ளார்.
