கோவிலில் நகையை திருடிய பிரபல கொள்ளையர்கள் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேற்றுக்கால் மாரியம்மன் கோவிலினுள் கடந்த 25-ம் தேதி அன்று நள்ளிரவில் கொள்ளையர்கள் 3 பேர் புகுந்துள்ளனர். அவர்களை விசாரித்த காவலாளி கணேசனை மூவரும் சேர்ந்து தாக்கியுள்ளனர். இதையடுத்து அவரை ஒரு அறைக்குள் வைத்து பூட்டிவிட்டு கொள்ளையர்கள் கோவிலுக்குள் சென்றுள்ளனர். அங்கு கோவிலுனுள் இருந்த அரை பவுன் பொட்டு தாலி மற்றும் ஒரு கிலோ அளவிலான வெள்ளிக்கவசம் ஆகியவற்றை திருடிவிட்டு […]
