உத்தரகாண்ட் மாநிலத்தில் வரும் 14ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து அங்கு பாஜகவினர் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வகையில் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரகாண்ட் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது, “இந்தியாவிலேயே மிகவும் பாதுகாப்பான மாநிலம் உத்திரப்பிரதேசம் தான். மாநிலத்தின் பாதுகாப்பில் பாஜக எவ்வித சமரசமும் செய்யாது. உத்தரகாண்ட் மாநிலமும் அது போல மாற வேண்டும். […]
