அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளரான பிரியங்கா காந்தி தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களைப் பற்றி பிரதமருக்கு கேள்வி எழுப்பியுள்ளார். ஜோர்கத் நகரில் காங்கிரசின் பொது செயலாளரான பிரியங்கா காந்தி கடந்த இரு தினங்களுக்கு முன் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது,பிரதமர் தேர்தல் பிரச்சாரத்தின் போது, நாட்டின் வளர்ச்சி பற்றி வேதனைப்படுவதாக பேசியுள்ளார். பிரதமர் அசாமின் வளர்ச்சியை பற்றி பேசுவதாக நினைத்தேன், ஆனால் ட்விட்டரில் 22 வயதுடைய பெண்ணின் பதிவை பேசியிருப்பது எனக்கு மிகவும் அதிர்ச்சியளித்தது. […]
