தூத்துக்குடி மாவட்டசிபிசிஐடி அலுவலகத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஒருவரிடம் விசாரணை நடைபெற்று வருகின்றது. சாத்தான்குளத்தில் காவல் நிலையத்தில் தந்தை – மகன் கொல்லப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றார்கள். இந்த நிலையில் இது குறித்த விசாரணைக்காக பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஒருவர் ஆஜர் ஆகி இருக்கின்றார். சம்பவத்தன்று காவல் நிலையத்தில் பணியில் இருந்த கணபதி என்பவரிடம் மாவட்ட சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகின்றது. சிபிசிஐடி ஐ.ஜி சங்கர் இந்த விசாரணையை மேற்கொண்டு வருகின்றார். […]
