பிரசித்தி பெற்ற கோவிலின் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் சித்திரை திருவிழா கடந்த 5-ம் தேதி சிறப்பாகத் தொடங்கியது. அதன்பின் மறுநாள் பாரதம் ஆரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையடுத்து ஒவ்வொரு நாளும் இரவில் சாமி வீதி உலா, கம்பம் நடுதல் நிகழ்ச்சி, அரவாண் பலி, கிருஷ்ணன் தூது, வெள்ளிக்கால் நடுதல், ராஜசூய யாகம், கூத்தாண்டவர் பிறப்பு, பாஞ்சாலி […]
