தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. அந்த வகையில் கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி நகைக்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பை 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதையடுத்து கூட்டுறவு சங்க நகை கடன்களை ஆய்வு மேற்கொள்ளும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. அதன்படி 48,84,726 நகைக்கடன் விபரங்கள் அனைத்தும் கணினி மூலமாக பகுப்பாய்வு செய்யப்பட்டு, அதில் 35,37,693 […]
