முப்படை தளபதிகள் குழுவின் தலைவராக இராணுவத்தளபதி மனோஜ் முகுந்த் நரவானே நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி மலைப்பகுதியில் கடந்த 8ஆம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படையின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதில் 80% காயத்துடன் மீட்கப்பட்ட குரூப் கேப்டன் வருண் சிங் பெங்களூரு விமானப் படை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மரணம் அடைந்தார். இதனால் […]
