திருப்பூர் கடை உரிமையாளருக்கு பிச்சைக்காரன் கொடுத்த ஆஃபர், இணையத்தில் வீடியோ வெளியாகி வைரலாக பரவி வருகிறது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள வெள்ளகோவில் கடைவீதியில் ஏராளமான நபர்களும் தினமும் பிச்சை எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதையடுத்து சம்பவத்தன்று சாட்டையால் அடித்துக் கொண்ட நிலையில் பிச்சை எடுக்கும் நபர் ஒருவர், இருசக்கர வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் நின்று பிச்சை கேட்டுள்ளார். அப்போது அந்த கடை உரிமையாளர், பிச்சை எடுப்பவரை பார்த்து, கை,கால்கள் நல்லா தானே இருக்கிறது எனவும், […]
